மரங்களற்ற ஊர், வற்றும் நீர் ஊற்று, ஈரமற்ற மண், கொழுத்தும் வெயில்... செல்வோம், நிழல் தேடி...!
Monday, February 20, 2012
ஸ்டூடண்ட்ஸ்....!
இது ஒரு மந்திர வார்த்தை...!
மாணவப் பருவத்தில் வானம் தான் எல்லை...
படிப்பதை தாண்டி அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்கும் பருவம்.
வீட்டைத் தாண்டி வெளி உலகம் எப்படி என்பதை
வீட்டுக்குள் ஊடகத்தால் அறிந்து கொள்கிறான்...
வெளி உலகில் பட்டு அறிந்து கொள்ள வேண்டியதை தொலைக்காட்சிகள் முன்னமே புட்டு புட்டு வைத்து விடுகின்றன...
இதிலே, முதலில் மாணவன் தெரிந்து கொள்வது, "ஏட்டு சுரைக்காய் கரிக்கு உதவாது...."
பள்ளியில் என்னவெல்லாம் சொல்லி தருகிறார்களோ எல்லாமே, மதிப்பெண் எடுக்க மட்டுமே..
மதிப்பெண் எடுத்தா நல்ல கல்லூரி, நல்ல வேலை என்பது மூளையில் ஏற்றி மட்டும் தான் விடப் படுகிறது...
படிக்க விடுவதற்கான எந்த சூழலையும் வீடு, கொடுப்பதில்லை... சமூக ஊடகங்கள் கொடுப்பதில்லை..
இதிலே, ஏன் ஊடங்கள் மேல் பழி போடனும் என்று நினைக்கலாம்.. அது தானே ? என் கேள்வியும்...
எத்தனை குப்பையை தான் பாத்தாலும் நாம அதற்கு அடிமையாய் கிடக்கிறோம்...
ஊடகம் தன் இறையாண்மைதனை மறந்து, கடமையை நாடு சுதந்திரம் பெற்ற உடன் முடித்துக் கொண்டது...
அதன் பின் எல்லாம் நம்ம மூளையை அழுக்காக்கி, காசு பார்க்கும் தொழில்களாக அவை மாறி விட்டன...
நிறைய இது பற்றி எழுத வேண்டும்....
செய்யறத எல்லாம் செய்து விட்டு, நஞ்சை கலந்து கொடுத்து விட்டு, பிஞ்சிலே பழுத்தது என மாணவர்களை பற்றி சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது...
----பஸ் டே கொண்டாடும் மாணவர்கள்...னு படம் போட்டு செய்தி...பார்த்தேன். அதற்கு நிறைய கண்டனங்களும் ல் பார்த்தேன்....
இந்த செய்தியை சொல்லும் ஊடங்கள் முதலில் ஊடக தர்மத்தை கடை பிடிக்கின்றனவா?
அப்படி சொல்லி இருந்தால் எம்மாணவர்கள் இப்படி செய்திருப்பார்களா?
காமராஜ், அண்ணா அல்லது ஏதேனும் உண்மை அரசியல் வாதிகள் பற்றியோ, சுற்றுப் புர சூழல் குறித்து அதன் ஆய்வாளர்கள், விவசாயம் அதன் அழிவு பற்றிய அலசல், விவசாய வல்லுநர்கள், புவி வெப்பமடைதல், பாலாறில் (எல்லா தமிழகத்து ஆறுகள்) மண்ணை இல்லாததால், அதைச் சார்ந்த மக்களின் வாழ்வு அழிந்தது, விவசாயி தற்கொலை, இன்னும் எத்தனை மக்கள் சார்ந்த பிரச்சினை இருக்கின்றன? அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து இந்த ஊடகங்கள் செயலாற்றி இருத்தால், இம்மாணவர்கள் எல்லோரும் கூடங்குளத்தில் அல்லவா போராட்டத்தில் இருந்து இருப்பார்கள்....
வயித்துப் பொழப்புக்காக தன் உயிரை பணயம் வைத்து கடலுக்கு மீன் பிடிக்க போனா குண்டு எங்கேருந்து வரும்னு தெரியாது..
உழைக்க நினைக்கறவனுக்கு
உயிருக்கு உத்திரவாதமில்லை...
ஊடகங்கள் உண்மையாய் நடந்து கொண்டு இருந்தால், இம்மாணவர்கள் சும்மா விட்டு இருப்பார்களா? என்னைக்கோ போராடி இருப்பார்கள்....
பண்ரதெல்லாம் பண்ணிட்டு தான் ரொம்ப ஒழுங்கு மாதிரி செய்தி போடலாமா?
தலைப்பு செய்தியில் எது வர வேண்டும்?
எத்தனை பத்திரிக்கை அதிகமா விற்கும்?
எந்த நிகழ்ச்சி ரேட்டிங்கில் அதிகம் வரும்...
காசு எத காட்டுனா வரும் என்று இயங்கும் ஊடங்கள் எதற்கு முக்கியத்துவம் தருகிறது?
பொழுபோக்கு தான் வாழ்க்கை ... ஜாலியா இருக்கனும்... அது தான் வாழ்க்கை...டைம்பாஸ்- என்னவேனா செய்வோம் பொழுது போக்கிற்காக-அவனுக்கு எத்தனை பிரசர்? நமக்கு என்ன தெரியும்? "பெத்தவங்க அரும்பாடு பட்டு உழைக்கிறாங்க.. நாம நல்லா படிக்கனும்டா" ... அவனை எங்கே நினைக்க விடுறாங்க..
நல்ல விசயம் பேசுனா, அது ரம்பம், அறுவை...மொக்கை.. என வெளிப்படையா நாமலே பேசும் போது, நமது கண்ணாடி பிம்பங்களான மாணவன் மட்டும் எப்படி இருப்பான்? அவன் சக்திக்கு முடிஞ்ச எஞ்சாய்மென்ட்.....!
Tuesday, January 17, 2012
மறந்து போனது....
மகனின் பள்ளி வகுப்பிற்காக அவனோடு சேர்ந்து வரைந்தது..
படம் வரைதல்-மிகவும் பிடித்த விசயம், வெகு நாட்கள் எப்படி மறந்து போனேன்...?
படம் வரைதல்-மிகவும் பிடித்த விசயம், வெகு நாட்கள் எப்படி மறந்து போனேன்...?
விடைகளற்ற கேள்விகள்..?
Wednesday, January 4, 2012
படித்ததிலிருந்து...1
நிறைய கருத்துக்கள்... இப்படி எல்லாம் நாம் ஏன் சிந்திக்கவில்லை என எண்ண வைக்கும் பதிவுகள் வினவில் உள்ளன.. நான் படித்த சிலவற்றில், ஒன்று இங்கே...
http://www.vinavu.com/2012/01/02/evolution/
- கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.-பதிவிலிருந்து...
இங்கே சொல்லப் பட்டு இருக்கும் விவாதப் பொருளை தாண்டி... எத்துனை உண்மைகள்...
விஞ்ஞானிகளின் மன தைரியம், உண்மை தெரிந்து கொண்ட மகிழ்ச்சி, ஏற்க தெரியாத பெரிய மனிதர்கள், தம்மை சுற்றி ஏதும் தெரியாத சாமானிய மனிதர்கள்...கட்டுரை நன்கு விவரிக்கிறது...
http://www.vinavu.com/2012/01/02/evolution/
- கூன் விழுந்த முதுகுடன், மண்புழுவை மட்டும் மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார் டார்வின். தான் கண்ட மயக்க மருந்தை சோதனை செய்ய தன்னுடம்பையே கருவியாக்கி பல தடவை மயக்கமடைந்தார் சிம்ஸன். எந்த உண்மையையும் சோதித்தறிய அலைந்து திரியும் கலிலீயோ தன் சொந்த வாழ்வின் எழிலைத் துறந்தார். மரணப்படுக்கையிலும் கூட கோள்களின் அமைப்பு பற்றி ‘பிதற்றிக்’ கொண்டிருந்தார் கோப்பர்நிகஸ். உயிரோடு கொளுத்தப்பட்ட போதும் விவிலியத்தின் முட்டாள் தனத்தை ஏற்க மறுத்தார் புருணே.-பதிவிலிருந்து...
இங்கே சொல்லப் பட்டு இருக்கும் விவாதப் பொருளை தாண்டி... எத்துனை உண்மைகள்...
விஞ்ஞானிகளின் மன தைரியம், உண்மை தெரிந்து கொண்ட மகிழ்ச்சி, ஏற்க தெரியாத பெரிய மனிதர்கள், தம்மை சுற்றி ஏதும் தெரியாத சாமானிய மனிதர்கள்...கட்டுரை நன்கு விவரிக்கிறது...
பார்த்ததிலிருந்து...1
Save the Planet - Comedian George Carlin's Way - Very Interesting...!
சாதாரண மக்களுக்கு புரியும் படி,
உண்மையை, நகைச்சுவையாய் சொல்வது அரிய கலை,...அதிலே கைதேர்ந்தவர், ஜார்ஜ் காலின்.. அவருடைய பேச்சில்.. ஒரு பகுதி...
http://www.youtube.com/watch?v=7W33HRc1A6c&feature=related
சாதாரண மக்களுக்கு புரியும் படி,
உண்மையை, நகைச்சுவையாய் சொல்வது அரிய கலை,...அதிலே கைதேர்ந்தவர், ஜார்ஜ் காலின்.. அவருடைய பேச்சில்.. ஒரு பகுதி...
http://www.youtube.com/watch?v=7W33HRc1A6c&feature=related
Tuesday, January 3, 2012
சோஷியல் நெட்வொர்க் ....என் பார்வையில்..
தனி மனிதனை ஓரிடத்தில் தனியே இருந்து கொண்டே கூட்டத்தில் பேசுவது போல பேச வைக்கிறது..
நேருக்கு நேர் பேச முடியாததையும் நெட்வொர்க்கில் பேச வைக்கிறது...
இன்றைய கால கட்டத்தில் மக்களின் தனிமையை போக்க இது உதவுகிறது...
இதனால், பக்கத்தில் இருப்பவனை விட பதில் போடும் நெட்வொர்க் நண்பர் வட்டம் பெரிது ஆகிறது...
தன் நெட்வொர்க்கில் இருப்பவர்களையும், தன் நெட்வொர்க்கில் சேர்பவர்களைப் பற்றிய அக்கரையையும் வளர்க்கிறது...
அதோடு நின்று விடாமல்,
அருகாமையிலோ, தொலைவிலோ இருக்கும்
இணைய வசதியோ, அதற்கு நேரமில்லாமலோ உழைக்கும் நண்பர் அல்லது உறவுகளின் தொடர்பை
நாம்
விட்டு விடக் கூடாது..
_____
சொஷைட்டி பற்றியோ, சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி பற்றியோ, நான் தெரிந்து கொள்ள விரும்பிய செய்திகள் பற்றியோ... நான் பேசுகிறேன், என் சோஷியல் நெட்வொர்க்கில்.இதையெல்லாம் பற்றி பேச பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை என்பது எனது தனிப்பட்ட அனுபவம்.....(சமூகம் சமூக பொறுப்புணர்வு இதை விட இவற்றின் ஆங்கில வடிவம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா..)
இங்கே என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். அது ஏன் நல்ல விசயங்களாய் இருக்க கூடாது..(பொழுபோக்காய் மாறிப் போன தொலைக்காட்சி, வானொலி எல்லாம் காசுக்காக நிகழ்ச்சி பண்ணும் போது எது நல்ல விசயம், எது தேவையான விசயம் எது தேவையில்லாத விசயம்..? நாம தான் தேடி தேடி பார்க்க வேண்டும்.. அவற்றுக்கு ஆதரவும் அளிக்க வேண்டும்...)
வாரந்திர, மாதாந்திர மற்றும் தினசரி பத்திரிக்கை எல்லாமே அது போல தான்.. எதைப் போட்டால், அதிகமா பத்திரிக்கை விற்கும் என்று தான் கணக்கு போட்டு செய்திகள் போடுகிறார்கள்.... உண்மையான சமூக நலனில் செய்திகள் போடுவதில்லை.... ஊடகம் மீதான அதீத சோர்வே அதன் மீதான வெறுப்பை எனக்கு தருகிறது...
மனிதன் சமூகப் பிராணி-என்று படித்த நாள் முதல், சமூகத்தில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது கவனிக்கத் துவங்கினேன்..? சமூகத்தை சீரழித்தாவது நம்ம சம்பாதிக்கனும் என்பது தானே, ஊடகங்களின் குறிக்கோளாய் இருக்கிறது..
இந்த சமூக தளங்களில், பொதுவாய் பேச வேண்டிய விவாதிக்கப் பட வேண்டிய ஆயிரம் அத்தியாவசியமான விசயங்கள் இருக்கிறது.. தொலைக்காட்சியிடம் சிக்கிக் கொண்டது போல், சிக்கிக் கொள்ளாமல், பயன்படுத்த நமக்கு தெரிய வேண்டும்...
நேருக்கு நேர் பேச முடியாததையும் நெட்வொர்க்கில் பேச வைக்கிறது...
இன்றைய கால கட்டத்தில் மக்களின் தனிமையை போக்க இது உதவுகிறது...
இதனால், பக்கத்தில் இருப்பவனை விட பதில் போடும் நெட்வொர்க் நண்பர் வட்டம் பெரிது ஆகிறது...
தன் நெட்வொர்க்கில் இருப்பவர்களையும், தன் நெட்வொர்க்கில் சேர்பவர்களைப் பற்றிய அக்கரையையும் வளர்க்கிறது...
அதோடு நின்று விடாமல்,
அருகாமையிலோ, தொலைவிலோ இருக்கும்
இணைய வசதியோ, அதற்கு நேரமில்லாமலோ உழைக்கும் நண்பர் அல்லது உறவுகளின் தொடர்பை
நாம்
விட்டு விடக் கூடாது..
_____
சொஷைட்டி பற்றியோ, சோஷியல் ரெஸ்பான்ஸ்பிலிடி பற்றியோ, நான் தெரிந்து கொள்ள விரும்பிய செய்திகள் பற்றியோ... நான் பேசுகிறேன், என் சோஷியல் நெட்வொர்க்கில்.இதையெல்லாம் பற்றி பேச பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை என்பது எனது தனிப்பட்ட அனுபவம்.....(சமூகம் சமூக பொறுப்புணர்வு இதை விட இவற்றின் ஆங்கில வடிவம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா..)
இங்கே என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். அது ஏன் நல்ல விசயங்களாய் இருக்க கூடாது..(பொழுபோக்காய் மாறிப் போன தொலைக்காட்சி, வானொலி எல்லாம் காசுக்காக நிகழ்ச்சி பண்ணும் போது எது நல்ல விசயம், எது தேவையான விசயம் எது தேவையில்லாத விசயம்..? நாம தான் தேடி தேடி பார்க்க வேண்டும்.. அவற்றுக்கு ஆதரவும் அளிக்க வேண்டும்...)
வாரந்திர, மாதாந்திர மற்றும் தினசரி பத்திரிக்கை எல்லாமே அது போல தான்.. எதைப் போட்டால், அதிகமா பத்திரிக்கை விற்கும் என்று தான் கணக்கு போட்டு செய்திகள் போடுகிறார்கள்.... உண்மையான சமூக நலனில் செய்திகள் போடுவதில்லை.... ஊடகம் மீதான அதீத சோர்வே அதன் மீதான வெறுப்பை எனக்கு தருகிறது...
மனிதன் சமூகப் பிராணி-என்று படித்த நாள் முதல், சமூகத்தில், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது கவனிக்கத் துவங்கினேன்..? சமூகத்தை சீரழித்தாவது நம்ம சம்பாதிக்கனும் என்பது தானே, ஊடகங்களின் குறிக்கோளாய் இருக்கிறது..
இந்த சமூக தளங்களில், பொதுவாய் பேச வேண்டிய விவாதிக்கப் பட வேண்டிய ஆயிரம் அத்தியாவசியமான விசயங்கள் இருக்கிறது.. தொலைக்காட்சியிடம் சிக்கிக் கொண்டது போல், சிக்கிக் கொள்ளாமல், பயன்படுத்த நமக்கு தெரிய வேண்டும்...
Subscribe to:
Posts (Atom)

