Wednesday, December 28, 2011

நிழல் வேண்டும்...

மரங்களற்ற ஊர், வற்றும் நீர் ஊற்று, ஈரமற்ற மண்:
கொழுத்தும் வெயிலில் நிழல் வேண்டும்...

வளமாய் கிடந்த வயல்வெளி, வறண்ட பாலையாய்...
பொங்கி வந்த நதியெல்லாம், புத்தகக் கதையாய்...

இயற்கையை சீண்டி விட்டு,
இயல்பு தனை மாற்றி விட்டோம்..

மண்ணில் சேர வேண்டிய,
வருடம் தவறாமல், ஆனால்
பருவம் தப்பி பெய்யும்
மழை...

மண்ணில் சேர முடியாத,
மக்காத குப்பைகளும், அதிலே
மக்கிப் போன அரசியலும்
ஆபத்தான பிழை...


மரங்களும், மண்ணில் ஈரமும்...!
மனிதமும், மனசாட்சியும் ...!

ஒப்புதல் சரியே...
பின்னது குறைவதால்,
முன்னது அழிவை நோக்கி...

Wednesday, July 27, 2011

நல் வரிகளின் தொகுப்பு

1. மனிதனின் அதிர்ஷ்டம் தலைவிதியில் இல்லை. செயல்களில் தான் உள்ளது.
2. மனிதனுக்கு அன்புள்ள இதயமும் அமைதியான மூளையும் தான் தேவை.
3. அறிவு, கைத்தொழில், கல்வி ஆகியவைகளை யாராலும் திருட முடியாது.
4. முயற்சியே பெருமை செர்க்கும்.
5. நாக்கையும், பணத்தையும் வீணாக்காமல் இருந்தால் மதிப்பும், செல்வமும் சேரும்.
6. நாம் வீழ்ச்சியடைந்தால் நமது விதியை துணிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
7. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும், இருளுக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
8. நம்பிக்கை நல்வழி காட்டும். சந்தேகம் சங்கடம் தரும்.
9. நம்பிக்கை இல்லாத இதயம் மூளையைக் கூட மோசம் செய்ய ஆரம்பித்து விடும்.
10. நம்பிக்கையோடு செய்யப்படும் பிரார்த்தனை நோயாளியின் உயிரை மீட்கும்.
11. உழைப்பு பிழைப்புக்காக மட்டுமல்லாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும்.
12. உழைப்பு உடலைப் பலப்படுத்தினால் கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
13. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையையும் அது விரட்டுகிறது.
14. உறுதியும், அன்பும் நம்மிடம் இருந்தால் பெரும்கவலை என்ற சுமையும் நீங்கும்.
15. நன்மையைக் கண்டும் அதை நாடாமல் இருப்பது கோழைத்தனமாகும்.

Friday, July 8, 2011

Los Gatos Library's Gift to Future

There was an interesting story in the newspaper. The new library of Los Gatos, a city in Bay area, California celebrated the burying ceremony of "Time Capsule" in front of the newly built library building.

The capsule contains an iPad hoping that the box would be opened on the bicentennial celebration of the Library in the year Aug 10 2087. The capsule contains the proofs of current era's lifestyle of people in Los Gatos, such as maps, photos and handprints of fewer people including kids and elderly. They hope somebody in the future might open the box and come to know about us.

They have hidden something like a surprise gift to the future about their life by their own hands.

We should know the uncertainty of one living longer than a hundred years except leaving history with good stories.

Monday, June 20, 2011

வெட்டி வேலை

சமைக்கும் போது, சில வேளைகளில் எதிர் பாராமல் சில உணவுப் பொருள்கள் மீதமாகி அல்லது அளவு அதிகமாக ஆகி விடும். அவ்வாறு மிகையான/மீதமான பொருளகளைக் கொண்டு சுவையான பதார்த்தங்கள் செய்ய முடியும் என கண்டு கொண்டேன். இந்த கண்டுபிடிப்புகள் தேவைப்படாத வேலை தான். இதில் முயற்சிகள் வீணாகப் போகவும் வாய்ப்புண்டு(புதிய பதார்த்தம்) உதாரணத்துக்கு, கொண்டைக்கடலையை கிரேவி செய்ய ஊற வைத்தாயிற்று. வேக வைத்த பின் அதிகமாய் ஊற வைத்து விட்டது தெரிந்தது..(ஊறியதும் தெரிந்தது தான்)...மீதம் எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து 3 நாள் கழித்து தான் அதே கிரேவி செய்ய வேண்டும். அதற்கு பதில் வேறு ரெசிபி இன்றே செய்தால் என்ன? அது தான் உடனடி வெட்டி வேலை. அந்த நேரத்தில் தேவைப்படாத வேலை, ஆனால் புது ரெசிபி திடீரென கிடைக்கும், பொருளும் வீணாவது இல்லை..
___________________________
உடைத்த கோதுமை உளுந்து வடை

தேவையான பொருட்கள்
வேக வைத்த உடைத்த கோதுமை - 1 கப்(குக்கரில் 2 விசில் வைக்கவும்)
உளுந்து - 2 கப்
ப மிளகாய் - 3
அரிந்த கொத்தமல்லி தழை - 1/4 கப்
அரிந்த வெங்காயம் - 1/4 கப்
துருவிய கேரட், மெல்லிசாய் நறுக்கிய முட்டை கோஸ் - 1/2 கப்
இஞ்சி, மெல்லிதாய் அரிந்தது - சிறிது
மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி(உடைத்துக் கொள்ளவும்)
உப்பு

செய்முறை
1. உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து மிகச் சிறிய அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
2. மற்ற அனைத்துப் பொருட்களையும் கலந்து, காய்ந்த எண்ணையில் வடை போல தட்டி சுட்டு எடுக்கவும்
-------------------------------------------------------------
உடைத்த கோதுமை பாயசம்

தேவையான பொருட்கள்
உடைத்த கோதுமை 1 கப்
தேங்காய் பால் - 1/4 கப்
முந்திரி திராட்சை
வெல்லப்பாகு அல்லது சர்க்கரை - தேவையான அளவு
ஏலக்காய்
ஜவ்வரிசி - 1/4 கப்

செய்முறை
1. ஜவ்வரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
2. உடைத்த கோதுமையை குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்
3. அதே குக்கரில், மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்க்கவும். சிம்மில் வைத்து வேக விடவும்.. தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து கிளறவும்.
------------------------------------------------------------
கொண்டைக்கடலை அல்வா

தேவையான பொருட்கள்
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
முந்திரி திராட்சை - தேவையான அளவு
கடலை மாவு - 1/4 கப்
நெய், ஆலீவ் ஆயில்
மசித்த வாழைப்பழம் - 1
தூளாக்கிய ஏலக்காய்
சர்க்கரை - 2 கப்

செய்முறை
1. ஊற வைத்த கொண்டைகடலையை, சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும். நன்றாக பிசையவும்.
2. நான் ஸ்டிக் கடாயில் கலவையை கொட்டி சிம்மில் வைத்து கிளறவும். இடையிடையே நெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்க்கவும்...
3. நன்றாக வெந்து நிறம் மாறும். அல்வா பதம் வந்த பின் இறக்கவும்.

Tuesday, June 7, 2011

பழங்கள் பறிக்க செல்வோம்

செர்ரி,

ஆப்ரிகாட், ஸ்ட்ராபெர்ரி இதற்கெல்லாம் இதே தான் தமிழிலும் பெயர்கள். பழங்கள் பழுக்கும் பருவத்தில் பொது மக்கள் தாங்களே வேண்டும் அளவுக்கு பழங்களை பறித்து எடுத்துக் கொள்ள அனுமதிக்கின்றனர் தோட்டங்களின் உரிமையாளர்கள். கலிபோர்னியாவில் ப்ரென்ட்வுட் என்ற இடத்தில் நிறைய பண்ணைகள் உள்ளன. பள்ளி விடுமுறை விட்டபின் குழந்தைகளுக்கு fruit picking என்றால் ஒரே சந்தோஷம் தான்.
விவரங்கள் இதில்...
http://www.harvest4you.com/

நிழல் தேடி ...

நிழல் தரும் மரம், தான் நிழலில் நிற்பதில்லை.

கிடைக்கும் நீரையும் நிலத்தையும் பயன்படுத்தவும்,
நிலத்தை மேலும் பண்படுத்தவும் தாவரங்களுக்கு யாரும் கற்றுத் தர வேண்டியது இல்லை...

நம்மால் நேரிடையாக இயற்கையை பாதுகாக்க முடியாவிட்டாலும், இது போன்ற செய்திகளை படிக்கலாம்...We already have some awareness about Re-Use, ReCycle and more...!We can follow or atleat not comment whoever follows...!

-முடிந்தவரை இயற்கையைப் பற்றியும், வனங்கள் பாதுகாப்பு, விவசாயம், மரம் வளர்ப்பு, வனம் சார்ந்த விலங்குகள் பற்றிய தகவல்...இன்னும் இது போன்ற செய்திகளை தேடி படிக்கவேண்டும்... என்ற ஆவலில், படிக்க கிடைத்தவற்றை இங்கே பதிகிறேன், திரும்பி படிப்பதற்காக..!
***************************************************************************

Tuesday, May 31, 2011

இயற்கையின் வழி...

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ? - கபிலர்

புல் நுனிமேல் நீர்போல்
நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க
அறவினை...- நாலடியார்;