Wednesday, July 27, 2011

நல் வரிகளின் தொகுப்பு

1. மனிதனின் அதிர்ஷ்டம் தலைவிதியில் இல்லை. செயல்களில் தான் உள்ளது.
2. மனிதனுக்கு அன்புள்ள இதயமும் அமைதியான மூளையும் தான் தேவை.
3. அறிவு, கைத்தொழில், கல்வி ஆகியவைகளை யாராலும் திருட முடியாது.
4. முயற்சியே பெருமை செர்க்கும்.
5. நாக்கையும், பணத்தையும் வீணாக்காமல் இருந்தால் மதிப்பும், செல்வமும் சேரும்.
6. நாம் வீழ்ச்சியடைந்தால் நமது விதியை துணிவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
7. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும், இருளுக்கும் அஞ்ச வேண்டியதில்லை.
8. நம்பிக்கை நல்வழி காட்டும். சந்தேகம் சங்கடம் தரும்.
9. நம்பிக்கை இல்லாத இதயம் மூளையைக் கூட மோசம் செய்ய ஆரம்பித்து விடும்.
10. நம்பிக்கையோடு செய்யப்படும் பிரார்த்தனை நோயாளியின் உயிரை மீட்கும்.
11. உழைப்பு பிழைப்புக்காக மட்டுமல்லாமல் உண்மைக்காகவும் இருக்க வேண்டும்.
12. உழைப்பு உடலைப் பலப்படுத்தினால் கஷ்டங்கள் மனதைப் பலப்படுத்தும்.
13. உழைப்பு வறுமையை மட்டும் விரட்டாமல், தீமையையும் அது விரட்டுகிறது.
14. உறுதியும், அன்பும் நம்மிடம் இருந்தால் பெரும்கவலை என்ற சுமையும் நீங்கும்.
15. நன்மையைக் கண்டும் அதை நாடாமல் இருப்பது கோழைத்தனமாகும்.

No comments:

Post a Comment